கடந்த ரெண்டு வருட காலங்களில் என் நினைவில் வந்ததை வைத்து எழுதியதன் தொகுப்பே இது..
இதில் பெரும்பாலானது எனது twitter -இல் வந்திருக்கலாம்., இருந்தாலும் அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவாக போட நினைத்ததே இது..
இதை எங்காவது படித்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ மன்னிக்கவும்….
காதலின் வலி, பிரிவு, ஏக்கம் ஆகியவற்றை சேர்த்து எழுதியதியது தான் இது..
என் படைப்புகள் /வலிகள்..
உன் முன்னால் உனக்காக படைக்கிறேன்…
=============================================================
கனவுகள் காண எனக்கு பிடிக்கும்! ஆனால் கனவுகளில் மட்டும் உன்னை காண – எனக்கு பிடிக்காது!!
———————————————————————————————————————–
கதைகளால் கவிதை சொன்னேன்., கவிதைகளால் அவளது காதலை சொன்னேன்!!!
———————————————————————————————————————–
உன்னை மறப்பதற்காக நான் கண் அடைக்கவா – இல்லை உன் நினைவுகள் என்னில் வர நான் கண் அடைக்கவா!! அன்பே சொல்வாயா என்னிடம்!!!
———————————————————-————————————————————-
நான் கவிஞ்னாக விரும்பினால்– என் கவிதை தொகுப்புக்கு –
புது அகராதியே தேவைப்படும் – ஆம்
உனை பற்றி வர்ணிக்க – அத்தனை அழகு நீ – என் அன்பே!!!!
———————————————————————————————————————–
அன்பே!!!! ஆம், நான் ரசனை அற்றவன்!
எனக்கு உன்னை விட எதையும் ரசிக்க தெரியாது!!!
———————————————————————————————————————–
“அன்று நீ என்னிடம் சொன்ன வார்த்தைகள்“
இன்றும் என் நினைவிலே – உனக்காக
காத்திருக்கிறேன் என் சகியே – நீ வருவாய் என!!!!
———————————————————————————————————————–
கனவொன்று நான் காண–இல்லை உனை கனவாக நான் காண மின்னல் வந்த வேகம்போல என்கனவு(நீ) சிதைந்தது!!!
———————————————————————————————————————–
கனவிலே கூடாரம் வைத்தேன்–அதில் நாம் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும், பிரிவு காணாமல் போனது!!!
———————————————————————————————————————–
கண்ணாடியும் நானும்:
ஒவ்வொரு தடவை கண்ணாடியை பார்க்கும்பொழுது, அது ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கும், ஆதலால் உனை வெறுக்கிறேன் இன்று முதல்
———————————————————————————————————————–
பாதங்கள் வலிக்கின்றன… இன்னும்– தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் என் மீதான உன் காதலை..
———————————————————————————————————————–
பூ பூவாக இருந்திருந்தால், நீ நீயாக இருந்திருப்பாய் நான், நான் நானாகவும்.. அல்லவா என் அன்பே!!!! #சகியே
———————————————————————————————————————–
நான் உன்னை காதலிப்பதற்கான காரணம் தெரிந்துவிட்டால் நான் எப்படி கவிஜர்ஆனேன் என்பதும் தெரிந்துவிடும்
———————————————————————————————————————–
உனக்காக நான் பிறந்தேனோ!! இல்லை.., எனக்காக நீ பிறந்தாயோ!!! நமக்காக பிறந்தது போலும் இந்த #பிரிவு
———————————————————————————————————————–
நான் நானாக இருக்க விரும்பிய போதெல்லாம்!!! உந்தன் பார்வை எனை உன்னுள் ஈர்த்தது !!!! #தவிப்பு
———————————————————————————————————————–
எனக்காக நீ இருப்பாயோ!!!
உனக்காக நான் இருப்பேனோ!!
நமக்காக யார் இருப்பார் இந்த உலகில் –
————————————————————————————————————————
நான் மட்டும் தனிமையில் இருப்பதாய் உணர்ந்தேன்.. நீயும் தனிமையில் வாடுவதை இன்று தான் உணர முடிந்தது..
———————-————————————————————————————————-
பெரும்பாலான அழகிகளை போல நீ அழகான அழகியல்ல., இருந்தாலும் உன் அழகிய கண்கள் எனை வசீகரித்து பேரழகியை போல் காட்டுகிறது!!
———————————————————————————————————————–
உன்னை முற்றிலும் மறந்த நாட்கள் அதிகம்! உன்னை பார்க்கும் ஒரு நொடியிலே என் பல நாட்கள் முடிந்து போகிறது., உந்தன் தரிசனத்தால்!!
———————————————————————————————————————–
யாருக்காகவும் எதற்காகவும் மாறமாட்டேன் என்றிருந்த நான் இன்று எதற்காகவே யாருக்காகவோ மாறிகொண்டிருக்கிறேன் அணு அணுவாய்!
———————————————————————————————————————–
நட்பு மற்றும் காதல் இரண்டிலும் உள்ள பிரிவு., நம்மை வெவ்வேறு உலகத்துக்கு எடுத்துசெல்லும்!! அந்த கொடுமையை அனுபவிக்கிறேன்!!
———————————————————————————————————————–
உனக்கு புரியாத மொழியில் வர்ணிக்கிறேன் உன்னை இங்கு., அதை பார்க்க நீயுமில்லை படிக்க மொழியுமில்லை உனக்கு!!
———————————————————————————————————————–
அமிர்தையும் விஷத்தையும் அருந்த தயார்., கொடுப்பது நீயாக இருந்தால் மட்டும்!!
———————————————————————————————————————–
உன்னை நினைக்கும்போதெல்லாம் நான் படும் மரணவலி வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்!!
—————————–——————————————————————————————
நான் அவளையும் அவள் என்னையும் காதலித்தநாட்கள் போய் அவள் என்னையும் நான் அவளையும் வெறுக்கிற காலம் சுகமானது!
———————————————————————————————————————–
உன்னை மறக்கவும்முடியாமல் வெறுக்கவும்முடியாமல் நான் படும் அவஸ்தை…. அச்சச்சோ!!
————————————————————————————————————————
இந்த வாழ்க்கை அவளுக்கானது.. எனக்கானது அல்ல.. அவள் வாழ வேண்டியது …. நான் வாழ்ந்து வீணடிக்க வேண்டியது அல்ல…
———————————————————————————————————————–
என் கனவுகளை நான் துறந்து விட்டேன்… ஏனெனில் அவள் என்னை தேடி கொண்டிருப்பதால்…
———————————————————————————————————————–
என் இதயத்தையே உனக்கு பரிசாக தர நான் தயார்., ஆனால் இன்னும் வேறு பரிசை எதிர்பார்க்கிறாய்! உன்திருமணநாளில்!!!
———————————————————————————————————————–
அனைவரிடமும் சொன்னேன் அவளைபற்றி ஆனால் அவளிடம் என்னைபற்றி சொல்ல மறந்துபோனேன்!
———————————————————————————————————————–
எனக்காக அவளும் அவளுக்காக நானும் காத்திருக்கபோவதில்லை! இருந்தாலும் பல நினைவுகளுடன் நாம் வாழ்கிறோம்!!
———————————————————————————————————————–
நீயோ எனக்கு ஒர் தொல்லை! என்னை தினமும் கறங்கடிப்பதும் நீயே! எந்தன் நிரந்தர போதையும் நீயே!!! மறக்கவும்/மறுக்கவும் முடியாமல் நான்!!
———————————————————————————————————————–
உன்னுடனான என் காதலை தேடுவதிலேயே முடிந்து விடுகிறது என் (நம்) வாழ்க்கை! – நிஜம்.
———————————————————————————————————————–
நீ என் அருகில் இல்லாத நாட்கள் என்றும் ஒரு சிறந்த நாளாக முழுமை அடைவதில்லை !!
———————————————————————————————————————–
என் இதயத்தை வெறுக்கிறேன் அது எனதாக அல்லாமல் அவளது இதயமாக துடிப்பதனால்!!
———————————————————————————————————————–
கனவுகளை அடுக்கிகொண்டே இருக்கிறோம் என்றாவது முழிப்போம் என்ற நம்பிக்கையில்…
———————————————————————————————————————–
பல கதவுகளை தட்டுகிறோம்!கடைசியில் திறப்பது ஏனோ குடிசைகள் தான்!! வாழ்க்கை!!
—————————————————————————————————————————–
கனவுகளை வரிகளாக்கினேன் நிஜத்தை வலிகளாக்கினேன்
———————————————————————————————————————–
உனது ஓர் சிரிப்புக்கு விலை கேட்டேன் சொல்லாமல் சிரித்தே கொல்கிறாய் என் அன்பே!!
———————————————————————————————————————–
காதலிப்பவன் எல்லாம் கவிதை எழுதினால் இந்த உலகமே கவிதைகளால் சூழ்ந்து இருக்கும்!!
———————————————————————————————————————–
காதலிப்பவன் எல்லாம் கவிதை எழுத மாட்டான் காதலை ரசிப்பவன் மட்டுமே கவிதை எழுதுவான்
———————————————————————————————————————–
நான் உன்னிடம் வரும்போது நீ எதிர்க்கிறாய் ஏனோ நீ என்னிடம் வரும்போது நானும் எதிர்க்கிறேன்!!
———————————————————————————————————————–
உன் இதயத்திலிருந்து சிரிக்கிறாய் அதை உன் உதடுகள் மறைக்கிறது இருப்பினும் உன் கண்கள் அதை காட்டி கொடுக்கிறது!!
———————————————————————————————————————–
நீ சிரிக்க நினைக்கிறாய் ஆனால் ஏனோ சிரிக்க மறுக்கிறாய்!!
———————————————————————————————————————–
பிரிந்து சென்றவர்களின் நினைவுகளால் நான் சோர்ந்துவிடுகிறேன்! அத்தகைய நினைவுகள் இனி யாருடனும் வேணாம்!
———————————————————————————————————————–
உன்னை என் லிஸ்ட்டில் இருந்து தூக்க பலதடவை முயற்சித்தேன், ஆனால் தினமும் நீ அனுப்பும் GM-க்காக வைத்திருக்கிறேன் list-ல்!!!
————————————————-———————————————————————-
பல நினைவுகளை புதைத்து போட குழி தோண்டுகிறோம், நினைவுகளுடன் நாமும் குழியில்!!
———————————————————————————————————————–
முடிந்துவிட்டது என முடிவெடுக்கும் தருவாயில் ஆரம்பிப்பது தான் வாழ்க்கை! திருமணவாழ்க்கை 🙂 காதல்வாழ்க்கை 😦
———————————————————————————————————————–
நான் உனக்காகவும் நீ எனக்காகவும் சிரிப்பதில்லை மனதால்! நமக்காக சிரிக்கின்றன தன் உயிரை மாய்த்து நம் கையில் ஊஞ்சலாடும் அழகியரோஜாப்பூ!
———————————————————————————————————————–
யாருக்காக வாழ்வது என்று ஒர் முடிவெடிப்பதிலே முடிந்து போகிறது வாழ்க்கை! நமக்கு பிடித்தவர்களுக்காகவா அல்லது நம்மை பிடித்தவர்களுக்காகவா!
———————————————————————————————————————–
எவ்ளோ கடவுள்தான் இருந்தாலும்., எப்டி தான் பிரார்த்தனை செய்தாலும்., சில காதல்கள் தோல்வியில் தான் முடிகின்றன!! – ஏனோ!!!
Few in Malayalam
നാം ജീവിക്കുന്ന ഓരോ നിമിഷവും അവൾക്കു വേണ്ടി മാത്രം ജീവിക്കന്നും.. ആരാ അവൾ അമ്മയോ അതോ ജീവിത പങ്ങാഴിയോ!
———————————————————————————————————————–
ആര്ക്കോ വേണ്ടി മരപിച്ചു പോകുന്ന ആ മനസ്! എന്നെങ്കിലും ഒരുദിവസം അലിയും എന്ന പ്രതീക്ഷയിൽ കാത്തിരുക്കുന്ന ഞാൻ.. സഹിയെ നിൻറെ താണ് ഈ ജീവിതം.
———————————————————————————————————————–
ഒരാളെ മാത്രമേ ആത്മാര്ഥമായി പ്രണയിക്കാന് സാധിക്കൂ .. അത് മറക്കുന്നത് എങ്ങനെയെന്നു മനസിലാകുന്നില്ല.. മറക്കില്ല..!
———————————————————————————————————————–
With Love.,
— Sree.,
Contact me @ Sreejith